August 1, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

பட்டப்பகலில் எரியும் தெருவிளக்குகள்: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் பொதுமக்கள் கவலை!

மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பகல் நேரங்களிலும் தெருவிளக்குகள் தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பதால், பெருமளவில் மின்சாரம் வீணாகி வருகிறது.
இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும், போக்குவரத்து வசதிக்காகவும் அமைக்கப்பட்ட இந்த தெருவிளக்குகள், சூரியன் உதித்த பிறகும் அணைக்கப்படாமல் அப்படியே எரிகின்றன. இதனால் மின் விரயம் ஏற்படுவதுடன், விளக்குகளின் ஆயுட்காலமும் குறையும் அபாயம் உருவாகியுள்ளது.உடனடி ஆய்வு: சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகளும், உள்ளாட்சி நிர்வாகமும் இப்பகுதியில் உடனடியாக கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.பகல் நேரங்களில் விளக்குகள் எரிவதைத் தவிர்க்க முறையான பராமரிப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மின் தட்டுப்பாடு நிலவும் இக்காலத்தில், இதுபோன்ற தேவையற்ற மின் விரயத்தைத் தடுக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மத்தூர் மக்களின் முதன்மை எதிர்பார்ப்பாக உள்ளது.