June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தொடக்கப் பள்ளியில் பாரதி வேடமணிந்து மாணவர்களின் பேச்சரங்கம்

வந்தவாசி, டிச 12:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கடைசி குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மகாகவி பாரதியாரின் 144 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியை லட்சுமிபாய் தலைமை தாங்கினார். வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்க தகவல் தொடர்பாளர் கேப்டன் பிரபாகரன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக, ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் பங்கேற்று, பாரதி கண்ட பாரதம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேலும் பாரதியார் வேடமிட்டு பாரதியார் குறித்த பாடல், பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியில் சமூக ஆர்வலர் சுரேந்தர் நன்றி கூறினார்.