திருமலா பால் நிறுவனத்தில் இருந்து பள்ளிக்கு இலவச தளவாட பொருட்கள்…!
1 min read
வந்தவாசி, ஏப் 25:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், வந்தவாசி அடுத்த பையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளிக்கு தேவையான முக்கிய தளவாடப் பொருட்களை திருமலா பால் நிறுவனத்தில் இருந்து வழங்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவிதா கோதண்டராமன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் சிவாஜி கணேசன் வரவேற்றார். இந்த நிகழ்வில் முன்னாள் டிஎம்பிஎல் டி..கோதண்டராமன் தளவாட பொருட்களான டேபிள், நாற்காலிகள், மின்விசிறிகள், பீரோ உள்ளிட்டவைகளை பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வி.விஜயகுமார் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் திருமலா பால் நிறுவன இயக்குநர் பாஸ்கர், சேதுபதி, டாக்டர் ஜெயபால், லோகேந்திரன், லோகேஷ், ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னாள் தலைவர் சிவராஜ், கிருஷ்ணமூர்த்தி, மணி,கிராம உதவியாளர் ரஞ்சித் உள்ளிட்ட பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.
More Stories
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் மாங்காய் க்கு போதிய விலை இல்லாததால் மரத்தை அறுக்கும் அவல நிலை
திருவண்ணாமலை மாவட்டம், செட்டிப்பட்டு கூட்ரோடு சுமங்கலி நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தனூர் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயில் கடந்த மூன்று மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.