இந்த நிகழ்ச்சிக்கு வையம்பட்டி பள்ளிவாசல் ஜமாத் தலைவர் சுலைமான் அவர்கள் தலைமை தாங்கினார்.
இளங்காகுறிச்சி தலைமை இமாம் ஆசிக் ரக்மான் அவர்கள் சிறப்பு சொற்பொழிவாற்றி ரமலான் மாதத்தின் சிறப்பையும் மனிதநேயத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.
இதில் சூர்யா நினைவறக்கட்டளை மற்றும் சமூதாயக் கல்லூரியின் நிறுவனத் தலைவர், முன்னாள் வையம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சூர் யா சுப்ரமணியன் கலந்து கொண்டு பேசுகையில், “லகும் தீனுகும் வலிய தீன் (உங்களுக்கு உங்கள் மார்க்கம், எனக்கு என் மார்க்கம்) என்ற குர்ஆன் வாசகத்தைப் போல மத நல்லிணக்கம் வளர வேண்டும்” என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான முஸ்லிம் சகோதரர்கள் மற்றும் அனைத்து பொதுமக்கள் கலந்து கொண்டு இஃப்தார் விருந்தில் பங்கேற்றனர்.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்