June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சென்னை தாட்கோ தலைமை அலுவலகக் கூட்டரங்கில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தலைமையில் ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து தாட்கோ அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் டாக்டர்.ந. சுப்பையன், ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் க.சு. கந்தசாமி, ஆதிதிராவிடர் நல இயக்குநர் டாக்டர் கி. செந்தில் ராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ம.சிந்தனை செல்வன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.