கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சுமார் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விழாவிற்கு ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் ந.இளையராஜா (BDS, MLA) தலைமை தாங்கினார். தமிழக வெற்றிக் கழகத்தின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் E.முரளிவிஜய் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, அன்னதானத் திட்டத்தைத் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு உணவுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட இணைச் செயலாளர் தாமோதரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுகுமார், சிங்காரவேலன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் D.தீபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மத்தூர் வடக்கு, தெற்கு, மேற்கு மற்றும் மத்திய ஒன்றிய செயலாளர்களான விக்னேஷ், திருமூர்த்தி, சக்தி, சிவா ஆகியோர் அன்னதானப் பணிகளை ஒருங்கிணைத்து வழங்கினர்.
நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழாவின் நிறைவாக, மாவட்ட இணைச் செயலாளர் J.இப்ராஹிம் நன்றியுரை ஆற்றினார்.
செய்தியாளர் முபாரக் 8428723357

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!