June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்புப் பணி முகாம்: எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு

வந்தவாசி, டிச 30:

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஒன்றியம், இளங்காடு ஊராட்சியில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் சார்பில் கோமாரி நோய் தடுப்பு பணி முகாமை ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமார் ஆகியோர் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினர். மேலும் கால்நடை மருத்துவர்கள், கால்நடை பராமரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற பொது மக்களுக்கு கால்நடைகளை பராமரித்தல், நோய் கிருமிகளில் இருந்து பாதுகாத்தல் போன்ற விழிப்புணர்வு தகவல்கள் வழங்கப்பட்டது. அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.