கள்ளக்குறிச்சி ஜீன் 03
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் பொது விநியோகத் திட்ட மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.இ.பத்மஜா தலைமையில் (01.06.2026) நடைபெற்றது.
பின்னர் இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
தமிழக அரசு உத்தரவிற்கிணங்க, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொது
விநியோகத் திட்ட மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்றைய தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொது விநியோகத் திட்ட பொருட்கள் விநியோகம், பொது விநியோகத் திட்ட குற்ற புலனாய்வுத்துறை நடவடிக்கைகள், பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வில், பொதுமக்களுக்கு விநியோகம் செய்யக்கூடிய அத்தியாவசியப் பொருட்களை தங்குதடையின்றி கொண்டுசெல்ல நடவடிக்கை மேற்கொள்ளவும், புதிய
குடும்ப அட்டை விண்ணப்பங்களை முன்னுரிமை அடிப்படையில் விரைவாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவும், பொது விநியோகத் திட்டப் பொருட்கள் பிற இடங்களில் ஏதும் விற்பனை ஆகாமல் இருப்பதை தீவிரமாக கண்காணித்து உறுதி செய்யவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.இ.பத்மஜா தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சி.பெ.முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் வே.முத்தையன் உள்ளிகொண்டனர் கலந்து கொண்டனர்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!