July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோட்டில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் ஆய்வு

ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள, வில்லரசம்பட்டி சிவபுரம் மற்றும் அவல்பூந்துறை பகுதிகளில் செயல்படும் தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் செயல்படும் மாணவிகளின் தங்கும் விடுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விடுதியில் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவுகளின் வகைகள் மட்டும் தரம் குறித்து ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர் உணவுக் கூடத்தில் அமர்ந்து உணவு சாப்பிட்டு, உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.