100 நாள் திட்ட தொழிலாளர்களுக்கு பொங்கல் புடவைகள் வழங்கப்பட்டது.
ஈரோடு. ஜன. 13


காக்கும் கரங்கள் மக்கள் நல அறக்கட்டளை சமூக அமைப்பு சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு பொங்கல், கரும்பு மற்றும் சேலைகள் வழங்கப்பட்டது.
முன்னதாக சமத்துவ பொங்கல் வைத்து ஈரோடு காக்கும் கரங்கள் மக்கள் நல அறக்கட்டளை நிறுவன தலைவர் சாந்தாதேவி புதுப் பானையில் பொங்கல் வைத்து, சூரிய பகவானை வழிபட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கினார்.
பின்னர் நடந்த நிகழ்ச்சியில் 100 நாள் வேலைத்திட்ட பெண் தொழிலாளர்களுக்கு, சர்க்கரைப் பொங்கல், கரும்பு மற்றும் சேலைகள் வழங்கி அவர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மக்கள் நல அறக்கட்டளையின் நிர்வாகிகள், திண்டல் சாந்தி, பிரியா, சத்தியமூர்த்தி, சண்முகநாதன், சௌந்தர்ராஜன் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

More Stories
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் மாங்காய் க்கு போதிய விலை இல்லாததால் மரத்தை அறுக்கும் அவல நிலை
திருவண்ணாமலை மாவட்டம், செட்டிப்பட்டு கூட்ரோடு சுமங்கலி நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தனூர் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயில் கடந்த மூன்று மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.