டிச-01
கோவையில் நடைபெற்ற ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரபி பேச்சு!!
கோவையில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் 3 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் பேரவை கூட்டம் போத்தனூர் பகுதியில் உள்ள ராசி அரங்கில் நடைபெற்றது..
கோவை மாநகர தெற்கு கிளை தலைவர் இராமதாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு அமைப்பினர்,அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்..
விழாவின் ஒரு பகுதியாக மருத்துவ முகாம் நடைபெற்றது..
நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரபி மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்..
தொடர்ந்து பேசிய அவர்,இந்தியாவிலேயே முன்மாதிரி முதல்வராக தமிழக முதல்வர் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறிய அவர்,தமிழகத்தில் மதங்களை கடந்து மனிதநேய ஆட்சி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்..
அதிகாரிகளாக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்ற பிறகும்,ஆக்கத்துடன் செயல்பட்டு வரும் ஓய்வு பெற்ற அலுவலர்களை உள்ளபடியே தாம் பாராட்டுவதாக கூறினார்..
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் 70 வயதை அடையும் ஓய்வு பெற்றவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்,ஒன்றிய அரசு ஓய்வூதியர்கள் பெறும் திருத்தப்பட்ட ஓய்வூதியத்தை தமிழக அரசு ஓய்வுதியர்களும் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன…

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!