வந்தவாசி, டிச 01:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கீழ்க்கொடுங்காலூர் – கன்னிகாபுரம் கிராமத்தில் சோனிக் தன்னார்வ அமைப்பின் அலுவலக திறப்பு விழா மற்றும் குழந்தைகள் தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக, தொழிலதிபர் கவிஞர் அ.ஜ.இஷாக் பங்கேற்று அலுவலகத்தை திறந்து வைத்து, பள்ளி மாணவர்களுக்கு கற்றல் பொருட்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் சோனிக் நிறுவனர் பி.லுசியன், தொண்டு நிறுவன மாவட்ட அமைப்பாளர் குமரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா குமார், ஊராட்சி செயலாளர் சக்திவேல் முருகன், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல் பா.சீனிவாசன், எஸ்ஆர்எம் கணினி மைய நிர்வாகி எ.தேவா, ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கதிரவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்