திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டியில் திமுகவின் முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான கே.என்.நேருவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பேருந்து நிலையம் அருகே பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அமைக்கப்பட்டிருந்த அலங்கார மேடையில் முன்னாள் வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ராஜலெட்சுமி வெங்கடேசன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு, மற்றும் பிரியாணி வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பேருந்து பயணிகளுக்கு லட்டு, சிக்கன் பிரியாணி, ஜில்லி பொதுமக்களுக்கும் கழக தோழர்களுக்கும் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இதில் முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அ.பாலசுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிதி வி.வி.வெங்கடேசன், ஒன்றிய பொருளாளர் ஓந்தாம்பட்டி மணி, வழக்கறிஞர் துரைஅழகிரி, ஒன்றிய அவைத்தலைவர் அண்ணாத்துரை, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் நாகராஜ், கப்பல் சதீஸ், மணிகண்டன் உள்ளிட்ட திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர். விழாவில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மணப்பாறை அருகே திமுக முதன்மைச் செயலாளர் பிறந்தநாளை பிரியாணி வழங்கி கொண்டாடிய திமுகவினர்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!