கோவை- நவ:13
முன்னணி பல்துறை மருத்துவமனையாக விளங்கும் கே.எம்.சி.ஹெச் தனது சமூக கடமைகளில் (CSR) ஒரு பகுதியாக வீரியம்பாளையத்தில் செயல்பட்டு வரும் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடத்தை கட்டிக்கொடுத்துள்ளது.
அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன்
ரூ. 2 கோடியே 18 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இக்கட்டிடத்தில் 7 வகுப்பறைகள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு தனி தனியே கழிவறைகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி
தாம் வசிக்கும் வீரியம்பாளையம் அரசு பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உதவிடும் வகையில் தொடர்ந்து சமூக சேவைகள் ஆற்றி வருகிறார். அதன் அடிப்படையில் சில வருடங்களுக்கு முன்னர் இதே பகுதிக்கு பல உதவிகள் செய்துள்ளார்.
இந்த புதிய பள்ளிக் கட்டிடத்தின் திறப்புவிழா நடைபெற்றது.
கோவை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி
ப. ராஜ்குமார்
புதிய பள்ளிக் கட்டிடத்தை திறந்து வைத்தார்.
கோவை மாநகராட்சி மேயர் கா.ரங்கநாயகி ராமசந்திரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் மற்றும் கோவை மாநகராட்சி துணை மேயர்
ரா. வெற்றிசெல்வன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி, துணை தலைவர் டாக்டர் தவமணி பழனிசாமி மற்றும் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் உரையாற்றிய டாக்டர் நல்லா ஜி.பழனிசாமி, கல்வி மற்றும் சமூக முன்னேற்றப் பணிகளில் கே.எம்.சி.ஹெச் தொடர்ந்து அக்கறையுடன் பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகிறது.
அதில் சமீபத்தில் கோவை மாவட்டம் வடமதுரை மற்றும் கழிக்கநாயகன்
பாளையம் ஊராட்சி பகுதியில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளிக்கட்டிடம், ஈரோடு மாவட்டம் நல்லாம்பட்டியில் ரூ. 2 கோடியே 11இலட்சம் மதிப்பில் புதிய பள்ளிக்கட்டிடம், கோவை மாவட்டத்தில் அமையவுள்ள உலகத்தர கிரிக்கெட் மைதானத்திற்கு ரூ. 1கோடி நிதிஉதவியும் வழங்கப்பட்டுள்ளது
என்றும் இம்முறையான சமூக பணிகள் செய்வதன் மூலம் மாணவர்கள் தரமான கல்வி பெறுவதற்கும் முன்னேற்றத்திற்கும் உதவிகரமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

More Stories
அவிநாசி (தனி)சட்டப்பேரவைக்கு வேட்பு மனுதாக்கல் செய்ததிருப்பூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்.
ஈஷா யோக மையம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில பாரத இந்து மகாசபா கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்!!
ஈரோடு மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர் மேனகா பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு..