திருச்சி நவ.19-
தேசிய சட்டப்பணிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கண் பரிசோதனை மருத்துவ முகாம் இன்று காலை நடைபெற்றது.சட்டப் பணிகள் ஆணை குழு செயலாளர் மாண்புமிகு நீதிபதி பிரபு தலைமை தாங்கினார் .முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி மாண்புமிகு சாமிநாதன் முகாமை தொடங்கி வைத்தார். மாண்புமிகு நீதிபதிகள் கார்த்திகா, வெங்கடேசன், புவியரசு , சௌமியா மேத்யூ,கலைவாணி,அண்ணாமலை,
அரசு வழக்கறிஞர் சவரிமுத்து,
,வழக்கறிஞர் சரபோஜி ,அரசு மருத்துவமனை கண் மருத்துவர்கள் பாரதி தேவி, ஜெயப்பிரியா
குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கச் செயலாளர் பி.வி.வெங்கட் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.முகாமில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு பயனடைந்தனர். நன்றி உரை மாண்புமிகு நீதிபதி கார்த்திகா அவர்கள் கூறினார். இதற்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செய்திருந்தன.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!