June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஆன்மிகம்

கல்லாலிப்பட்டு முத்து மாரியம்மன் கோவிலில் கூழ் வார்த்தல் திருவிழாசெஞ்சி மே 08விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுக்கா கல்லாலிப்பட்டு கிராமத்தில்...

கண்ணகி கோயிலில் ஒவ்வொரு மாதமும் வழிபாடு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்:: பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் தவராஜா:-தேனி. மே.03-வரலாற்றுச் சிறப்புமிக்க மங்கலதேவி கண்ணகி கோவிலில் தேனி மாவட்ட பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் தவராஜா கண்ணகி அம்மனை வழிபட்டார்.சித்ரா பௌர்ணமி திருநாளில் மங்கலதேவி கண்ணகி அம்மனை வழிபட்ட பின்பு அவர் தெரிவித்ததாவது: பனியன்குடி வழியாக தமிழக வனப்பகுதியில் சாலை அமைத்தால் தமிழகத்தில் இருந்து வரும் பக்தர்கள் எந்த இடையூறும் இன்றி கண்ணகி அம்மனை வழிபாடு செய்வார்கள்.சாலை அமைக்கும் பட்சத்தில் தமிழக பக்தர்கள் மாதந்தோறும் பௌர்ணமி அன்று கண்ணகி அம்மனை வழிபட்டு செல்வார்கள்.அதற்கு அரசு முழு முயற்சியுடன் ஏற்பாடு செய்ய வேண்டும்.சாலை அமைப்பது ஒன்றே தமிழக பக்தர்கள் எந்தவித இடையூறும் இன்றி கண்ணகி அம்மனை தரிசிப்பதற்கு தீர்வாக இருக்கும் என்று தெரிவித்தார்.தேனிமாவட்டம், கூடலூர் அருகே பளியன்குடி அருகே விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில் மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது. தமிழக-கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள இந்த கோவில் சேர மன்னன் செரன் செங்குட்டுவனால் கட்டப்பட்டது.சித்ரா பௌர்ணமி முழு நிலவு நாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த திருவிழாவில் இரு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்கள்.அதுபோல்,கூடலூர் அருகே பளியன்குடி மலைப்பகுதி வழியாக ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடந்து செல்வது வழக்கம்.பளியன்குடியில் இருந்து கண்ணகி கோயில் வரை நடந்து செல்லும் பாதை 6.6 கி.மீட்டர் உள்ளது.தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அதிகாலையில் பொங்கல் வைக்கப்பட்டு, பசுமையை குறிக்கும் வகையில் மங்கல தேவி கண்ணகிக்கு பச்சை பட்டு சாத்தப்பட்டு வண்ண மலர்கள் மற்றும் சிறப்பு அலங்கார பொருட்கள் கொண்டு சிறப்பான முறையில் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.மேலும்,கண்ணகி கோயில் வளாகத்தில் சித்ரா பௌர்ணமி அன்று மாலை 3:30 மணியளவில் பெய்த கனமழையின் போது மின்னல் தாக்கி காயமடைந்த கேரள மாநில காவலர் மற்றும் கேரள,தமிழக பக்தர்கள் பூரண குணமடைய இறைவனை பிரார்த்தனை செய்வதாகவும் தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் தவராஜா தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து தரிசனம் செய்து வரும் நிலையில் சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அதிகாலை மூலவர் அம்மனுக்கு பால் தயிறு சந்தனம் உள்ளிட்ட வாசனை திராவிடங்கள் சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபம் ஆராதனை நடைபெற்றது பக்தர்கள் சாமி தரிசனம் செய்து திருக்கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில்108 பெண்கள் அமர்ந்து திருவிளக்கு பூஜையில் ஈடுபட்டனர் கோவில் பூசாரி அம்மனைப் பற்றி பாடல் பாடினார் ஏராளமான பெண்கள் திருவிளக்கு பூஜையில் அம்மனை வழிபட்டனர் விழாவிற்கான இயற்பாட்டினை கோவில் உதவியாளர் சக்திவேல் குழு அறங்காவலர் தலைவர் ஏழுமலை அறங்காவலர் சுரேஷ் மதியழகன் பச்சையப்பன் சரவணன் வடிவேலு சந்தானம் மேலாளர் சதீஷ் உள் துரை மணியன் அண்ணாமலை காசாளர் மணி உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

செஞ்சி மே 2விழுப்புரம்மாவட்டம் செஞ்சியை அடுத்த தையூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு தடுத்தாண்டீஸ்வரர் உடனுறை தையல்நாயகி அம்மன் கோவில்...
செஞ்சி மே 02விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த குறிஞ்சிப்பை வடக்கு தாங்கள் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அமைச்சர் அம்மன்...
செஞ்சி மே 02விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பீரங்கி மேடு பகுதியில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஸ்ரீ வெங்கடேச பெருமாள்...
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள நெடுங்கல் அடுத்த என்.மோட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் மற்றும்...

அறந்தாங்கி மே1 புதுக்கோட்டை மாவட்டம்அறந்தங்கி அருகே ,ஆலங்குடி கிராமத்தில் காளியம்மன், கருப்பர், நூதன ஆலய அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்டம்,அறந்தாங்கி தாலுகா,ஆலங்குடி கிராமத்தில் ,காளியம்மன், கருப்பர்,நூதன ஆலய அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடைபெற்றது நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்,இக்கோயில் கும்பாபிஷேகம் செய்வதென கோயில் நிர்வாகிகளால் முடிவு செய்யப்பட்டு அதற்கான புணரமைப்பு பணிகள் நடைபெற்று முடிந்தது.இந்நிலையில் சிறப்பான யாகசாலை அமைக்கப்பட்டு முதற்கால யாகபூஜை புதன்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கியதுவிழாவின் முக்கிய நாளான இன்று மூன்றாம் காலயாகபூஜை நிறைவுற்று கடம் புறப்பாடு நிகழ்வு நடைபெற்றதுகடம் புறப்பாடானது கோவிலை சுற்றி வலம்வந்த பின்னர் கோபுர கலசத்தை அடைந்ததுபின்னர் கருட பகவான் கோவிலை வட்டமிட சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.நூற்றுக்கனக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது .கோவில் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை ஆலங்குடி கிராமத்தினர் செய்திருந்தனர்அறந்தாங்கி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அறந்தாங்கி பழனிவேல்

பாண்டியன் குலம் புனித லூர்து அன்னை ஆலய பத்தாம் ஆண்டு திருவிழாசெஞ்சி மே 01விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுக்கா சம்பந்த ஊராட்சி பாண்டியன் குளம் கிராமத்தில் புனித லூர்து அன்னை ஆலய பத்தாம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றதுநிகழ்ச்சியில் 24/ 04 / 2026 அன்று திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது இதில் திருப்பலியும் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றதுதொடர்ந்து 27/04 / 2026 திங்கட்கிழமையன்று மாணவர்கள் மற்றும் பொது மக்களின் நடனம் மற்றும் சிலம்பம் கும்மி பாட்டு போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றதுதொடர்ந்து28/04/ 2026 அன்று செவ்வாய்க்கிழமை அன்று மாலை 6 மணி முதல் திருப்பலி அணிலாடி பங்குத்தந்தை பெர்க்மான்ஸ் மற்றும் பேராசிரியர் அலெக்ஸ் தலைமையில் நடைபெற்றதுமுன்பாக கம்மந்தூர் ஊராட்சி மன்ற தலைவர் காமாட்சி சத்தியமூர்த்தி தலைமையில் புனித லூர்து அன்னை ஆலயத்திற்கு மேயாதாளம் சீர்வரிசை எடுத்து வந்து லூர்து அன்னைக்கு மாலை அணிவித்து லூர்து அன்னையை தரிசனம் செய்தனர்தொடர்ந்துஇரவு 8:30 மணிக்கு தேர் பவனி துவங்கியது வான வேடிக்கையுடன் நடைபெற்ற தேர்பவனி யை ஊராட்சி மன்ற தலைவர் காமாட்சி சத்தியமூர்த்தி சமூகத் தலைவர் பவுல்தாஸ் பங்குத்தந்தை பெர்க்மான்ஸ் பீட்டர் பேராசிரியர் அலெக்ஸ் ஊர் பொதுமக்கள் தேர் பவனியை இழுத்து தொடங்கி வைத்தனர் தேர் பவனியானது தெருக்களில் வளம் வந்து லூர்து அன்னை பக்தர்களுக்கு அருள் பாலித்தார்இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்