June 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

வந்தவாசியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்..!

வந்தவாசி, ஜூன் 26:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செய்யார் மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்விற்கு செய்யாறு மதுவிலக்கு அமலாக்க பிரிவு உதவி ஆய்வாளர் சரவணன் தலைமை தாங்கினார். வந்தவாசி தெற்கு காவல் நிலைய துணை ஆய்வாளர் விநாயகமூர்த்தி, பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசம்பந்தன், சமூக ஆர்வலர்கள் ஏ.ஜெ.ரூபன், மலர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி ஆசிரியர் முத்தமிழ், உதவி ஆய்வாளர் முருகன் உள்ளிட்ட காவலர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலம் பள்ளியில் தொடங்கி பஜார் வீதி வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. நிகழ்ச்சியை கேப்டன் பிரபாகரன் தொகுத்து வழங்கினார்.

You may have missed