ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா கோவிலில் அமைச்சர் நிர்மல்குமார் வழிபாடு:-தேனி. ஜூன்.தேனி- குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சீலையம்பட்டியில் அமர்ந்து அருள் பாலிக்கும் ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா தேவி திருக்கோயில் ஞான சக்தி பீடத்தில் தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் வழிபாடு செய்தார்.அவருக்கு பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டு,கோவில் அர்ச்சகர் மற்றும் கோவில் நிர்வாகத்தினரால் பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது.எம்.எல்.ஏ.க்கள் ஜெகநாத்மிஸ்ரா,சபரி ஐங்கரன்,முன்னாள் எம்.பி. பார்த்திபன் ஆகியோருக்கும் பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது.அப்பொழுது, காலகண்டி, பைரவ மகரிஷி என்று பக்தர்களால் போற்றப்படும் மஹா பிரத்யங்கிரா தேவி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் காட்சி அளித்தார்.ஸ்ரீ சாந்தி ஞாநஸரஸ்வதீ மாதா குரு,கோவில் தர்மகர்த்தா ராஜேந்திரன்-நிர்மலா குடும்பத்தினர்,இரா.யுகேஷ்குமார் உட்பட சீலையம்பட்டி ஸ்ரீ பிரத்யங்கிரா தேவி திருக்கோயில் ஞான சக்தி பீடத்தினர்,முக்கிய பிரமுகர்கள்,ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

More Stories
நல்லூர் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம்..!
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பிரதமரின் பன்னிரண்டு ஆண்டு கால நல்லாட்சியை முன்னிட்டு நாட்டுக்குப் பயன்படும் வகையில் ஒரு நிகழ்ச்சியாக கொண்டாட வேண்டும் . என்ற நோக்கத்தில் தமிழகத்தில் மாவட்ட வாரியாக சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக மரக்கன்றுகள் நடப்பட்டது விழா நடைபெற்று வருகிறது.மாநிலத் தலைவர் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களின், ஆணைக்கிணங்க திருச்சிமாவட்ட புறநகர் தலைவர் அஞ்சாநெஞ்சன் அவர்களின், ஆலோசனின் படி மணப்பாறை நகர் மண்டலில் நகர தலைவர் சுரேஷ் தலைமையில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக மரக்கன்றுகள் நடப்பட்டது விழாவில் மாவட்ட பொதுச்செயலாளர் பொன்னுவேல் மாவட்ட அமைப்பு சாரா பிரிவு செயலாளர் வீரப்பன் மண்டல் பொதுச் செயலாளர் ராஜா மண்டல் செயலாளர் ஆரோக்கியசாமி கிளை தலைவர் சதீஷ்குமார் மகளிர் அணியைச் சார்ந்த ராஜராஜேஸ்வரி வெண்ணிலா மற்றும் பல பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மகா மாரியம்மன் கூழ்வார்த்தல் திருவிழா..!