புதுச்சேரி, ஜூன் 4:
ஸ்ரீ ஆத்மநாதர் சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் முப்பெரும் விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி சிறப்பு சிவபூஜை, ஆன்மிக சொற்பொழிவு மற்றும் பக்தர்களுக்கான அன்னதான நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் சிவபெருமானின் அருள், ஆன்மிக வாழ்க்கையின் அவசியம், பக்தியின் சிறப்பு மற்றும் மனித நேயப் பணிகளின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், தீபாராதனை மற்றும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு முக்கிய அழைப்பாளராக உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேரு @ குப்புசாமி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அவரது வருகையை விழா ஏற்பாட்டாளர்கள் மற்றும் பக்தர்கள் வரவேற்றனர்.
முப்பெரும் விழாவில் சண்முகம், ரெகுநாதன், அகரவேல், சாமிநாதன், சம்பத், கலியரசி, திருவாலங்காடு பித்தன் சிவகலையன், சிவசித்தர் உள்ளிட்டோர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
மேலும் திரளான சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டு ஆன்மிக அருளைப் பெற்றனர்.

More Stories
அய்யலூர் அருகே கோவில் திருவிழாவில் செருப்பு மற்றும் துடைப்பத்தால் ஒருவருக்கொருவர் அடித்தும், உடலில் சேறு பூசியும் வினோத நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
எரமலூர் பெருமாள் கோவிலில் வசந்தோற்சவ விழா..!
ஏகணிவயல் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் தேர் பவனி கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு