செஞ்சி, அக்-31
செஞ்சி சந்தைமேடு பகுதியில் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் இயங்கி வருகிறது. சங்கத்தில் விவசாயிகளின் வேளாண் விளை பொருட்களை மறைமுக ஏலம் மூலம் விற்பனை மேற்கொள்ளும் நடைமுறை 27.10.2025 அன்று தொடங்கப்பட்டது . இதன் மூலம் விவசாயிகளின் விளை பொருட்களுக்கான தொகை அன்றைய தினமே விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். நெல் மறைமுக ஏலம் செய்யப்படும் துவக்க நிகழ்ச்சியில் விற்பனை சங்கத்தின் மேலாண்மை இயக்குனர் மாரியப்பன், பொது மேலாளர் தேசிங்கு, உதவியாளர் ரவி, பழனிவேல், மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர். வாரம் தோறும் திங்கட்கிழமை அன்று மறைமுக நெல் கொள்முதல் நடைபெறும் மேலாண் இயக்குனர் தெரிவித்தார்.
செஞ்சி வேளாண்மை உற்பத்தியாளர் விற்பனை சங்கத்தில் நெல் மறைமுக ஏலம் துவக்கம்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!