வந்தவாசி மே 02:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தேரடி பகுதியில் தவெக சார்பில் மக்கள் சேவகர் தியாகி அஞ்சலை அம்மாள் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர் கார்த்திக், மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் திருவாசகமணி, நகர செயலாளர் வெங்கடேசன், நிர்வாகிகள் ஜல்லி குமார், இளையராஜா, மணிகண்டன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். மேலும் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!