July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கோடைகால பயிற்சி நிறைவு விழாவில் மாணவர்களுக்கு வளர் இளம் மேதை விருதுகள்: மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் வழங்கினார்.!

வந்தவாசி, மே 19:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் 25 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற மாணவர்களுக்கான கோடைகால இலவச பயிற்சி வகுப்புகளின் நிறைவுவிழா நேற்று கல்வி மைய வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சர்புதீன் தலைமை தாங்கினார். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை பிளோமினா, ஓவிய ஆசிரியர் பெ.பார்த்திபன், கணினி மைய நிர்வாகி எ.தேவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக, மேனாள் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் டாக்டர் எஸ்.குமார் பங்கேற்று மாணவர்களுடைய தனித்திறன் செயல்பாடுகளையும், கற்றல் திறன்களையும் விளக்கி பேசினார். மேலும் ஓவியம், யோகா, ஸ்போக்கன் இங்கிலீஷ், திருக்குறள் போட்டிகள், கராத்தே உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற 65 மாணவர்களுக்கு ‘வளர் இளம் மேதை’ என்ற விருதுகளை வழங்கி பாராட்டினார். மேலும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்வில் இந்தி ஆசிரியை டெல்லிபாய், ஸ்போக்கன் இங்கிலீஷ் ஆசிரியர் கு.சதானந்தன், முதுகலை ஆசிரியர் க.பூபாலன், பட்டதாரி ஆசிரியர் கபிலன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் ஆசிரியர் மகாவீர் நன்றி கூறினார்.