June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

இ.எஸ் கல்வியியல் கல்லூரியில்பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு விழா

விழுப்புரம் மே 13
விழுப்புரம் இ.எஸ்
கல்வியியல் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர்
சந்திப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவை சி.எஸ் கல்வி குழுமத்தின் தலைவர்
செல்வமணி தலைமை தாங்கி துவங்கிவைத்தார்.
கல்லூரி முதல்வர் முனைவர் செந்தில்முருகன்
வரவேற்புரையாற்றினார்,
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருத்தினர்களாக கடலூர் நல்லாசிரியர்
விருது பெற்ற மரிய ஜோசப்
திருவண்ணாமலை, கலைஞர் கருணாநிதி
அரசு கலைக் கல்லூரி விரியுரையாளர் முனைவர் முருகன்
கல்வியியல்
கல்லூரி முன்னாள் மாணவர், விழுப்புரம் சிகரம் போட்டி தேர்வு அகாடமி இயக்குனர் கணபதி,கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதில் மாணவர்களின் கல்வி மட்டும் அன்றி ஒழுக்கம் தன்னம்பிக்கை மற்றும் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்கள் மேலும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து செயல்பட்டால் மாணவர்கள் உயர்ந்த நிலை அடைய முடியும் என்றும் நோக்கம் அளிக்கும் வகையில் பேசினார்கள் இந்நிகழ்ச்சியில் மாணவர்களின் வாழ்வில் பதிவு கல்வி முன்னேற்றம் ஒழுக்கம் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான முக்கியத்துவத்தை எடுத்து வைக்கிறார் மேலும்
மாணவர்கள் வில்லுபாட்டு, நாடகம், நடனம், பேச்சு, கரகம், போன்ற
நிகழ்ச்சிகளை நடத்தியும் அனைவரின் பாராட்டைப் பெற்றனர்.
இறுதியில் வருகைபுரிந்த
பெற்றோர்கள் அனைவரும் இணைந்து மாணவர்கள் ஒவ்வொவருக்கும் ஆசிவழங்கி
மகிழ்ந்தனர்.
இதில் சி.எஸ்.கல்வியியல் கல்லூரி துணை பேராசிரியர்களும் மற்றும் பயிற்சி மாணவ
ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

You may have missed

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் ஜூன்-07:உலக சுற்றுச்சூழல் தினத்தை சிறப்பிக்கும் வகையில் மக்கள் ஜனாதிபதி APJ அப்துல் கலாமின் வல்லரசு இந்தியா இயக்கம் மற்றும் APJ அப்துல் கலாம் IAS அகாடமி சார்பில் செஞ்சி கோட்டை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு வருவாய் ஆய்வாளரும், சமூக சேவகருமான கண்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் செஞ்சி வருவாய் வட்டாட்சியர் கார்த்திகேயன் அவர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள் அருள்தாஸ், புகழரசன், தமிழ்நாடு தன்னார்வலர் அமைப்பின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணியின் ஹரிவாசன் மற்றும் செஞ்சி APJ அப்துல் கலாம் IAS அகாடமியின் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.