உற்சாகத்தில் தொண்டர்கள் _ வெற்றிக் களிப்பில் வேட்பாளர் செந்தில்நாதன்..
ஈரோடு. ஏப்ரல். 12
மொடக்குறிச்சியில் நடைபெற்ற வைகோ மற்றும் துறை வைகோ தேர்தல் பிரச்சாரத்திற்கு பின்பு தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். வேட்பாளர் செந்தில்நாதன் வெற்றிக் களிப்பில் உள்ளார்.
தமிழக சட்டமன்ற பேரவை பொது தேர்தல் 2026, வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் மே நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்த நிலையில் திமுக தலைமையிலா மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அவர்கள் தங்களின் தொகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் திமுக, காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள், தேமுதிக, மதிமுக கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகிய கூட்டணி கட்சிகளின் வேட்பாளராக மதிமுக வேட்பாளர் சா. செந்தில்நாதன் போட்டிருக்கிறார்.

இவர் மொடக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த பிறகு திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் தொண்டர்களோடு சென்று தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
மதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் செல்லும் இடமெல்லாம் அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் திருச்சி மதிமுக எம்பி, முதன்மைச் செயலாளர் துரை வைகோ ஆகியோ மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட, கணபதிபாளையம் மற்றும் கருமாண்டம் பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மதிமுக வேட்பாளர் செந்தில் நாதனே ஆதரித்து உதய சூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தனர்.
தலைவர்களின் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. அக்கட்சியின் முதன்மைச் செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மாநாடு துறை வைகோ உள்ளிட்ட தலைவர்கள் தொகுதியில் மதிமுக வேட்பாளர் செந்தில்குமார் ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்து தேர்தல் பிரச்சாரம் செய்ததால், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். வேட்பாளர் செந்தில்குமார் வெற்றி மகிழ்ச்சியில் உள்ளார்.

More Stories
சேலம்,மேட்டூரில் சூறாவளிக் காற்றுடன் மழை – மின்கம்பங்கள், மரங்கள் விழுந்து 3 வீடுகள் சேதம்.
தற்காலிக சபாநாயகராக நியமனம் செய்யப்பட்ட அதிமுக மாநில கழக செயலாளர், கழக சட்டமன்ற உறுப்பினர்திரு. ஏ. அன்பழகன் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் ரங்கசாமி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.இந்நிகழ்வின் போது மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பாப்புசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள்ஏ கே டி ஆறுமுகம், திருமுருகன், மாண்புமிகு முதலமைச்சரின் நேர்முக உதவியாளர் சுந்தர் ஆகியோர்உட னிருந்தனர்.
புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனை: குடோனுக்கு சீல், ஒரு நபர் கைது – போலீசாரின் அதிரடி நடவடிக்கை!புதுச்சேரி:புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.1.5 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் (சட்டம் & ஒழுங்கு) கலைவாணன், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரிலும், வடக்கு காவல் கண்காணிப்பாளர் வம்சீதர ரெட்டி, இ.கா.ப., அவர்களின் மேற்பார்வையிலும், புதுச்சேரி காவல் துறையினர் சட்டவிரோத செயல்களை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று (ஏப்ரல் 24, 2026) மாலை 4 மணியளவில், டி.நகர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜன் மற்றும் வடக்கு குற்றப்பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திருப்பூர் குமரன் வீதி, எண். 22 என்ற முகவரியில் உள்ள ஒரு குடோனை, போலீசார் வருவதைக் கண்ட நபர் ஒருவர் அவசரமாக பூட்ட முயன்றார். சந்தேகமடைந்த போலீசார், அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், அவர் கோசாபாளையத்தைச் சேர்ந்த மாரியமுத்து (50) என்பது தெரியவந்தது. தான் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களை குறிவைத்து, அதிக லாபத்திற்காக அரசு தடை செய்த புகையிலை பொருட்களை விற்பனை செய்து வருவதை அவர் ஒப்புக்கொண்டார்.இதனையடுத்து அவரது குடோனில் போலீசார் நடத்திய சோதனையில், கீழ்க்கண்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன:கூல் லிப் (Cool Lip) – 2 பண்டல்கள்ஹான்ஸ் (Hans) – 8 பண்டல்கள்விமல் பான் மசாலா (Vimal Pan Masala) – 6 பண்டல்கள்வி1 டொபாக்கோ ஹேப்பி ஹோலி (V1 Tobacco Happy Holi) – 7 பண்டல்கள்இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 1,50,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக டி.நகர் காவல் நிலையத்தில் வழக்கு (Cr. No. 96/2026) பதிவு செய்யப்பட்டு, மாரியமுத்து கைது செய்யப்பட்டார். COTPA சட்டம் மற்றும் சிறார் நீதிச் சட்டத்தின் (JJ Act) கீழ் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.குற்றவாளியை விரைந்து கைது செய்து, தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மற்றும் வடக்கு பிரிவு காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பாராட்டினர்.