திருச்சி. மார்ச் 4-
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சமூகப் பணித் துறையின் சார்பில், I MSW மாணவர் பயிற்சியாளர் எஸ். பாண்டிதுரை, கல்லூரி வளாகத்தில் “Second Chance Clothing” என்ற தலைப்பில் மனநலக் குறைபாடு கொண்ட நபர்களுக்கான பழைய பயன்படுத்தப்பட்ட ஆடைகள் சேகரிப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, கல்லூரி மாணவர்களிடமிருந்து நன்றாக பயன்படுத்தக்கூடிய பழைய ஆடைகள் சேகரிக்கப்பட்டன. சமூக நல நோக்கத்துடன் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது பயன்படுத்தப்பட்ட ஆடைகளை தாராளமாக வழங்கினர்.
சேகரிக்கப்பட்ட ஆடைகள், மனநலக் குறைபாடு கொண்ட நபர்களின் புனர்வாழ்விற்காக செயல்படும் குணசீலத்தில் அமைந்துள்ள The Banyan நிறுவனத்திற்கு வழங்கப்பட்டன. இந்நிறுவனம் அவசர பராமரிப்பு மற்றும் மீட்பு மையத்தை நடத்தி, மனநலக் குறைபாடு கொண்ட நபர்களுக்கு சிகிச்சை, பராமரிப்பு மற்றும் புனர்வாழ்வு சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிகழ்ச்சி மையத்தில் தங்கியுள்ள பயனாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. சேகரிக்கப்பட்ட ஆடைகள், சமூகப் பணித் துறைத் தலைவர் லெப். டாக்டர் எப். கார்டர் பிரேம்ராஜ் மூலம் அதிகாரப்பூர்வமாக அந்த நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டன.

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election