கிருஷ்ணகிரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தி திணிப்பை எதிர்த்து போராடி உயிரிழந்தவர்களை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரி ஐந்து ரோடு ரவுண்டான பகுதியில் மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் தமிழ் மணி தலைமையில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மண்டல துணைச் செயலாளர் தங்க தியாகு முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாவட்ட செயலாளர் கனியமுதன் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கத்தை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சசிகுமார், பொருளாளர் ரகு, மாநிலத் துணைச் செயலாளர் பாலன், நகர துணைச் செயலாளர் கணபதி, நிர்வாகிகள் மணி ஜெகநாதன், சரவணன், பிரதாப், சாமுவேல், ராஜேந்திரசோழன், லட்சுமணன், ஆட்டோ குமார், வேலு கண்ணதாஸ், ரஜினி, சுரேஷ், அருண், சரவணன், சுரேஷ்குமார், கோவிந்தராஜ், அன்பு, மாதேஷ், பிரதீப், இனியவன், காளிதாஸ், ராஜதுரை, பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்