February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

வடமதுரை, ஜன.18-
வடமதுரை அருகே உள்ள தென்னம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1995-ஆம் ஆண்டு 10-ம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவ மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்ட முன்னாள் மாணவ மாணவிகள் தங்களது பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து அவர்களது பள்ளி ஓவிய ஆசிரியை பாத்திமா மேரிக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவப்படுத்தினர். அதன்பின்னர் குடும்பத்தினருடன் கலை நிகழ்ச்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டனர். அதனைத்தொடர்ந்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தனர். அதன்பின்னர் முன்னாள் மாணவர்கள் சார்பாக பள்ளிக்கு கண்காணிப்பு கேமராக்களை வழங்கினர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp