கோவை-ஜன:11
கணியூர் பகுதியில் உள்ள பார்க் கல்லூரியில் தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் திருவிழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. கல்லூரி வளாகத்தில் மண் பானையில் பொங்கல் பொங்க, “பொங்கலோ பொங்கல்” என முழக்கமிட்டு மாணவர்கள் சூரிய வழிபாடு செய்தனர்.
கிராமத்து திருவிழாவை நினைவூட்டும் வகையில் உரியடித்தல், கயிறு இழுத்தல், கும்மி ஆட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பொங்கல் விழாவிற்கு தனித்துவம் சேர்த்தது.
இந்த நிகழ்ச்சியில் பாஜக விளையாட்டுப் பிரிவு மாநில செயலாளரும், கல்லூரியின் தலைமை செயல் அதிகாரியுமான அனுஷா ரவி கலந்துகொண்டு மாணவர்களை ஊக்குவித்தார்.
குறிப்பாக, கொங்கு மண்ணின் பாரம்பரிய துடும்பு இசை முழங்க, அதற்கேற்றவாறு மாணவ-மாணவியர் அனைவரும் உற்சாகமாக நடனமாடிய பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.
தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பெருமைப்படுத்தும் விதமாக இந்த கொண்டாட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!