கோவை -ஜன:11
நலம் காக்கும் ஸ்டாலின் உயிர் சிறப்பு மருத்துவ முகாம் கோவை சூலூர் வட்டாரம் அரசூர் ஊராட்சி பகுதியில் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது முகமினை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அவர்கள் முகாமை துவக்கி வைத்தார். இம்முகாமில் கண் சிகிச்சை, பல் சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை, பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எழும்பு மருத்துவம், சர்க்கரை நோய், இருதய நோய், நுரையீரல் மருத்துவம், தோல் சிகிச்சை, நரம்பியல் சிகிச்சை, மாற்று திறனாளிகள் மற்றும் இயன்முறை மருத்துவம் போன்ற பல்வேறு மருத்துவ சிகிச்சை நடைப்பெற்றது. மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர்.பாலுசாமி தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், வட்டார மருத்துவ அலுவலர் பாரூக், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கண்ணப்பன் மற்றும் முன்னாள் அரசூர் ஊராட்சி தலைவர் அன்பரசன், மருத்துவர்கள், பணியாளர்கள், பொது மக்கள் என ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!