வேலூர், ஜன 07 –
வேலூர் மாவட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில்,
சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்ற திமுகவின் 311வது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையில் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். தற்போது அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் காத்திருப்பு போராட்டத்தை இடை நிலை ஆசிரியர்கள் நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தலைவர் பானுரேகா, செயலாளர் விஜயன், பொருளாளர் ஏழுமலை ஆகியோர் தலைமையில், 100க்கும் அதிகமான இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்