வேலூர், ஜன 07 –
வேலூர் மாவட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில்,
சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்ற திமுகவின் 311வது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையில் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். தற்போது அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் காத்திருப்பு போராட்டத்தை இடை நிலை ஆசிரியர்கள் நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தலைவர் பானுரேகா, செயலாளர் விஜயன், பொருளாளர் ஏழுமலை ஆகியோர் தலைமையில், 100க்கும் அதிகமான இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!