புதுச்சேரி:
ஆர் எல் வி மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் மற்றும் புதுச்சேரியின் மூத்த அரசியல்வாதியுமான ஆர் எல் வி வெங்கட்ராமன் அவர்கள் இன்று செய்தியாளர்களை நேரில் சந்தித்தார்.
அப்போது அவர், வரும் புத்தாண்டு புதுச்சேரி மக்களின் வாழ்வில் ஒரு புதிய விடியலை ஏற்படுத்த வேண்டும் என்று தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மலரும் புத்தாண்டு புதுச்சேரி மாநிலத்தின் முன்னேற்றத்திற்காகவும், குறிப்பாக இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் பெண்களின் அதிகாரப் பகிர்வுக்கான ஆண்டாகவும் அமைய வேண்டும். ஆர் எல் வி மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் அனைத்து மக்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” எனக் கூறினார்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்