திருச்சி டிச- 30:
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி – மணப்பாறை தேசிய நெடுஞ்சாலையில் காரைப்பட்டி என்னுமிடத்தில் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பேர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கோரிக்கைகளான தேசிய நான்கு வழிச் சாலையை காரைப்பட்டி என்னும் இடத்தில் அப்பகுதி செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்து ஏற்படுவாதாக இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலையை சீர் செய்து தர மறுப்பதாக சாலை மறியலில் ஈடுபட்டனர் ,மேலும் போக்குவரத்து பாதிப்பு தகவல் அறிந்து வந்த மணப்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் துவரங்குறிச்சி போலீசார் குழுவுடன் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் . அப்போது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வந்தால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவதாக உறுதி அளித்தனர் ,மேலும் தகவல் அறிந்து வந்த தேசிய நெடுஞ்சாலைத் துறையைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் பொதுமக்களிடம் சாலையை விரைந்து சரி செய்து தருவதாக உறுதி அளித்ததன் பேரில் அப்பகுதி மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!