ஏற்காடு : டிச 31
சேலம் மாவட்டம் ஏற்காடு மாரமங்கலம் பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவருக்கும் சுமதி என்ற பெண்ணுக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இன்னிலையில் சுமதிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் என்பவரது மகன் வெங்கடேஷ் வயது 23 என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி வந்து கள்ளக்காதல் ஏற்பட்டது கடந்த 23ஆம் தேதி வீட்டில் இருந்த சுமதி காணவில்லை என்று அவரது கணவர் சண்முகம் என்பவர் புகார் அளித்ததை தொடர்ந்து ஏற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் சுமதி வெங்கடேஷ் தனிமையில் இருந்த போது சுமதியின் செல்போனுக்கு வந்த அழைப்பு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வெங்கடேஷ் சுமதியின் துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொலை செய்து கொட்டச்சேடில் இருந்து குப்பனூர் செல்லும் சாலையில் உள்ள சுமார் 200 அடி பள்ளத்தில் சாக்கு மூட்டையில் கட்டி வீசிவிட்டார் என்பது விசாரணையில் தெரியவந்தது அதனை தொடர்ந்து அவரை கைது செய்து நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.


More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்