June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

செஞ்சி கூட்ரோட்டில் அமைந்துள்ள சென்னை பேருந்து நிறுத்தத்தை கூட்ட நெரிசல் காரணமாக பயணிகளின் பாதுகாப்பு கருதி உடனடியாக இடம் மாற்ற கோரும் மனு **

இன்று 29.12.2025 ஊழல் தடுப்பு பவுண்டேஷன் ஆப் இந்தியாயுடைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் திரு.ம. லூர்து சாவியோ அவர்களின் தலைமையில் கூட்ட நெரிசல் காரணமாக பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி செஞ்சி கூட்ரோட்டின் அருகாமையில் அமைந்துள்ள சென்னை பேருந்து நிறுத்தத்தை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் போதுமான இடம் இருப்பதால் சென்னை பேருந்துகளை ஆங்கு நிறுத்த வழிவகை செய்ய மாவட்ட ஆட்சியர் மற்றும் உரிய அலுவலகங்களுக்கு மனு அனுப்பப்பட்டு மேலும் அச்சங்கத்தினர் செஞ்சி காவல் நிலையத்திலும் செஞ்சி சரகு துணை கண்காணிப்பாளர் அவர்கள் அலுவலகத்திலும் நேரில் சென்று உடனடியாக இடமாற்றம் செய்ய புகார் மனு அளிக்கப்பட்டதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

வணக்கத்துடன்🙏
வழக்கறிஞர் ம.லூர்து சாவியோ
மாநில ஒருங்கிணைப்பாளர் – ஊழல் தடுப்பு பவுண்டேஷன் ஆஃப் இந்தியா