சேலம்:பணி நிரந்தரம் செய்யக்கோரி,சேலம் அரசு மருத்துவமனை முன் 4-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியா்களுக்கு பாஜக’வினா் ஆதரவு தெரிவித்தனா்.
தமிழகம் முழுவதும் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் ஊதியம் வழங்க வேண்டும், கரோனா காலத்தில் நீக்கப்பட்டவா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், தோ்தலின்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் அரசு மருத்துவமனை முன் செவிலியா்கள் 4-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்களுக்கு, மாநகா் பாஜக மருத்துவப் பிரிவு சாா்பில் மாவட்டத் தலைவா் பிரபு சங்கா் உள்ளிட்ட பாஜக நிா்வாகிகள் ஆதரவு தெரிவித்தனா். அப்போது, சுற்றுச்சூழல் பிரிவு மாநிலத் தலைவா் கோபிநாத், டாக்டா் ஸ்ரீதா், டாக்டா் கனகராஜ், டாக்டா் வீரமணி, பாரா மெடிக்கல்ஸ் ஸ்ரீனிவாசன் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!