கோவை-டிச:24
தமிழகத்தில் முதல்முறையாக கோவை கொடிசியா மைதானத்தில் 90 அடி உயரமும், 250 அடி நீளமும் கொண்ட நீர்வீழ்ச்சி அமைப்புடன் ‘வொண்டர் ஃபால்ஸ்’ பொருட்காட்சி நடைபெற உள்ளது.
எவர்கிரீன் என்டர்டெயின்மென்ட் சார்பில் நடத்தப்படும் இந்த ‘Wonder Falls’ பொருட்காட்சியின் தொடக்க விழா நடைபெற்றது.
வரும் டிசம்பர் 23ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரையும், வேலை நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரையும் பொதுமக்கள் இந்த பொருட்காட்சியை பார்வையிடலாம்.
இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் துரை செந்தமிழ்செல்வன், வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ் காந்தி, திமுக ஐடி விங் செயலாளர் மகேந்திரன், முன்னாள் எம்பி ஏ.பி. நாகராஜன், கோவை மாநகராட்சி வரிவிதிப்பு தலைவர் முபசிரா பானு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் எவர்கிரீன் என்டர்டெயின்மென்ட் உரிமையாளர்கள் ஆஷிக் அலி, அஸ்ரப், அபுதாஹீர், ரஞ்சித் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்