February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

நீதிபதியை மிரட்டும் 120 எம்பிக்களை தகுதி நீக்கம் செய்க: ஜனாதிபதி, பிரதமர், தலைமை நீதிபதிக்கு மருதமலையார் பரபரப்பு கடிதம்!

டிசம்பர் 11: திருப்பரங்குன்றம் கோவில் விவகாரத்தில் தீர்ப்பு வழங்கிய நீதிபதியை பதவி நீக்கம் செய்யக் கோரி கையெழுத்திட்ட, திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 120 எம்பிக்களையும் உடனடியாக தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, இந்து தர்ம பாதுகாப்பு பேரவையின் தமிழ்நாடு மாநில துணைத் தலைவர் மருதமலையார் (எ) மருதமலை ஏகேஜி சித்தார்த் அபிமன்யு, நாட்டின் மிக உயர்ந்த பதவிகளில் உள்ளவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

திருப்பரங்குன்றம் கோவில் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, சம்பந்தப்பட்ட நீதிபதியை பதவி நீக்கம் (Impeachment) செய்ய வேண்டும் என திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
​கடிதம் அனுப்பப்பட்டவர்கள்:
இந்தச் செயல் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிப்பதாகக் கூறி, இன்று (டிசம்பர் 11) கீழ்க்கண்ட முக்கியத் தலைவர்களுக்கு மருதமலையார் தனித்தனியாகக் கடிதம் அனுப்பியுள்ளார்

​இந்திய குடியரசுத் தலைவர்
​இந்திய துணை குடியரசுத் தலைவர்
​பாரதப் பிரதமர்
​மத்திய உள்துறை அமைச்சர்
​மக்களவை சபாநாயகர்
​உச்சநீதிமன்ற நீதிபதி , ஆகியோருக்கு
​இந்து தர்ம பாதுகாப்பு பேரவையின் தமிழ்நாடு மாநில துணைத் தலைவர் மருதமலையார் (எ) மருதமலை ஏகேஜி சித்தார்த் அபிமன்யு எழுதியுள்ள அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது

​”நீதித்துறை என்பது அரசியலமைப்பின் தனித்துவமான மற்றும் சுதந்திரமான அமைப்பாகும். ஒரு வழக்கில் நீதிபதி வழங்கிய தீர்ப்புக்காக, அவரை அச்சுறுத்தும் வகையில் 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து அவரைப் பதவி நீக்கம் செய்யக் கோருவது ஜனநாயகத்திற்கு விரோதமானது. இது நீதித்துறையின் சுதந்திரத்தில் அரசியல்வாதிகள் தலையிடும் மிக மோசமான முன்னுதாரணமாகும்.
​நீதிபதியைச் சுதந்திரமாகச் செயல்பட விடாமல் தடுக்கும் வகையிலும், நீதித்துறையை மிரட்டும் வகையிலும் செயல்பட்ட இந்த 120 எம்பிக்களும் தங்களது பதவிப் பிரமாணத்தை மீறியுள்ளனர். எனவே, நீதித்துறையின் மாண்பைக் காக்க, அந்த நீதிபதியை எதிர்த்த 120 இந்தியா கூட்டணி எம்பிக்களையும் உடனடியாக தகுதி நீக்கம் செய்ய வேண்டும்,” என்று அந்தக் கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
​நாட்டின் மிக உயர்ந்த அதிகாரம் கொண்ட 6 முக்கியத் தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள இந்தக் கடிதம், டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Facebook
YouTube
Instagram
WhatsApp