வந்தவாசி , நவ 26:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணிகளை விரைவில் முடிக்குமாறு அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் டி.செல்வம், வட்டாட்சியர் எஸ்.சம்பத் குமார், நகராட்சி ஆணையர் சோனியா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலரும் பங்கேற்றனர். இந்த ஆய்வின் போது அங்கு வரையப்பட்ட விழிப்புணர்வு ரங்கோலி கோலத்தையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்