சேலத்தில் விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் முகமூடி கொள்ளையர்களின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜாகிர் ரெட்டிப்பட்டி நகரில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரங்களில் முகமூடி அணிந்த 4 பேர் கொண்ட கும்பல் வீடுகளை நோட்டமிட்டுச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஜாகிர் ரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவரது வீட்டின் கதவை உடைத்து, விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை முகமூடி கொள்ளையர்கள் திருடிச் சென்றதன் சிசிடிவி காட்சி வெளியானது.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!