வந்தவாசி, நவ 23:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்ட தமிழ் சங்கம் சார்பில் பல்சுவை அரங்கம் நடைபெற்றது இந்த நிகழ்வுக்கு சங்கத் தலைவர் வே.சிவராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மா.கதிரொளி முன்னிலை வகித்தார். செயலாளர் ஆ.மயில்வாகனன் வரவேற்றார்.
முதலாவதாக நடைபெற்ற கவியரங்கில் தகவல் தொடர்பாளர் கவிஞர் மு.பிரபாகரன், தலைமை ஆசிரியர் லியோ பெலிக்ஸ் மேத்தா, பேராசிரியை ஜான்சி ராணி, முதுகலை ஆசிரியர் செல்வராஜ் ஆகியோர் பங்கேற்று செந்தமிழ் கவிதைகளை வாசித்தனர். மேலும் புலவர் மா.ரகுபதி குழுவினரின் ‘என்றுமுள தென் தமிழ்’ என்ற தலைப்பில் வில்லுப்பாட்டு நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வை துணைத் தலைவர் கோ. ஸ்ரீதர் தொகுத்து வழங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் பிச்சாண்டி, அங்கையன், புலவர் ஏழுமலை, கு.ராமஜெயம், சு. வெங்கடேசன் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் பலரும் பங்கேற்றனர். இறுதியில் சங்க பொருளாளர் த.முருகவேல் நன்றி கூறினார்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!