புதுச்சேரி JCM மக்கள் மன்றம்: காமராஜர் நகர் தொகுதி தலைவராக விஜயராஜ் பதவியேற்பு – கேக் வெட்டி உற்சாக கொண்டாட்டம்!
புதுச்சேரி:
புதுச்சேரி JCM மக்கள் மன்றத்தின் காமராஜர் நகர் தொகுதி தலைவராக விஜயராஜ் அவர்கள் பதவியேற்றுக் கொண்டார். இதனை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காமராஜர் நகர் தொகுதி 24-வது பூத் தலைவர் வைகுண்டம் தலைமையேற்று நடத்தினார். புதிய தலைவராகப் பொறுப்பேற்ற விஜயராஜ் அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து, அனைவரும் ஒன்றிணைந்து கேக் வெட்டித் தங்கள் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.
இந்நிகழ்வில் காமராஜர் நகர் தொகுதி இளைஞர்களான மணிகண்டன், தியாகராஜன், ஹரி, பாலாஜி, ரவி, பரணி, கார்த்தி, லிங்கேஷ் மற்றும் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!