மத்தூர் ஜூலை 18.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்து பாராண்ட பள்ளி புதூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் மகள் ஜீவராணி 30 பெங்களூருவில் தகவல் தொழில்நுட்பம் நிறுவனத்தில் பணியாற்றிய போது, ஊத்தங்கரை அருகே பாப்பனூர் கிராமத்தைச் சார்ந்த ஜீவனுடன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று வயது தனுஸ்ரீ என்ற மகள் உள்ளார். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு கணவன் ஜீவனுக்கும் மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டதால் அடிக்கடி குடும்பத்த தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் ஜீவராணி டி என் பி எஸ் சி தேர்வில் தேர்ச்சி பெற்று போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு பணியில் சேர்ந்தார். பின்னர் கணவனின் சந்தேகத்தால் பாதிக்கப்பட்டு குழந்தையுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தவுடன் ஏழு மாதங்களுக்கு முன்பு குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி ஜீவராணி வழக்கு தொடர்ந்தார். இதற்கு காரணம் ஜீவராணியின் தம்பியான சுசேந்திரன் தான் என்று ஜீவன் புரிந்து கொண்டு சுசேந்திரன் நீதிமன்ற ஊழியர் கிருஷ்ணகிரியில் பணிபுரிகிறார்.

இந்நிலையில் ஜீவன் தன்னுடைய கூட்டாளிகள் இருவருடன் சேர்ந்து நேற்று முன்தினம் காலை 6 மணி அளவில் போச்சம்பள்ளி அருகே உள்ள பாராண்ட பள்ளி புதூரில் உள்ள சுசேந்திரன் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு ஏற்பட்ட தகராறில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுசீந்திரனை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு இரு கைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க வந்த சுசீந்திரனின் மாமனார் மெழுகு வேளின் தலையில் கத்தியால் தாக்கியதி

More Stories
வாரிசு சான்றிதழுக்கு ரூ.4,000 லஞ்சம்: மணப்பாறை அருகே முதுநிலை வருவாய் ஆய்வாளர் கையும் களவுமாக கைது
மணப்பாறை போலீசார் அதிரடியால் சூதாட்ட கும்பல் ஓட்டம் மூன்று பேர் கைது.
விழுப்புரம் மாவட்ட காவல்துறைதிருவெண்ணைநல்லூர் காவல் நிலையம்குட்கா விற்பனை செய்த இரு நபர்கள் கைது