July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் உண்டியல் காணிக்கை ருபாய்53லட்சம்

ஜூன் 2 .

உண்டியல் காணிக்கை என்னும் பணியை பார்வையிட்ட கோவில் துணை ஆணையர் மற்றும் அறங்காவலர்கள்

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரு.5327825.லட்சத்தை பக்தர்கள் செலுத்தி இருந்தனர்.

பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து வழிபடுகின்றனர் அவர்கள் வேண்டுதலை நிறைவேற காணிக்கையாக பணம் மற்றும் தங்கம் வெள்ளி ஆகியவற்றை உண்டியலில் செலுத்தி வருகின்றனர் இந்நிலையில் இந்து சமய அறநிலைத்துறை.விழுப்புரம் துணை ஆணையர் லட்சுமணன் உதவி ஆணையர்கள் மேல்மலையனூர் சக்திவேல் விழுப்புரம் சுந்தரராஜன் அறங்காவலர்கள் முன்னிலையில் உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டது.

இதில் ரூபாய் 5327825.ரொக்கம் மற்றும் தங்கம் 61.800கிராம் வெள்ளி 467 கிராம் ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.