வந்தவாசி, மே 15:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் சிறப்பு பயிற்சி பெற்று நடைபெற்ற அரசு பொதுத் தேர்வில் +2 நேரடி தனித்தேர்வு எழுதி 449 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தார். மேலும் அவர் தமிழில் 98 மதிப்பெண்கள் பெற்று வந்தவாசி பகுதியில் சிறப்பிடம் பெற்றமைக்கு தனித் தேர்வு மாணவி பி.சித்ராவுக்கு பாராட்டு விழா ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன், முதுகலை தமிழாசிரியர் பூங்காவனம், முதுகலை ஆசிரியர் பூபாலன், ஆசிரியர் மகாவீர் உள்ளிட்ட மாணவ மாணவிகள் பலரும் பங்கேற்றனர்.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்