June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

+2 நேரடி தனித் தேர்வு: தமிழில் 98 மதிப்பெண்கள் பெற்ற மாணவிக்கு பாராட்டு..!

வந்தவாசி, மே 15:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் சிறப்பு பயிற்சி பெற்று நடைபெற்ற அரசு பொதுத் தேர்வில் +2 நேரடி தனித்தேர்வு எழுதி 449 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தார். மேலும் அவர் தமிழில் 98 மதிப்பெண்கள் பெற்று வந்தவாசி பகுதியில் சிறப்பிடம் பெற்றமைக்கு தனித் தேர்வு மாணவி பி.சித்ராவுக்கு பாராட்டு விழா ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன், முதுகலை தமிழாசிரியர் பூங்காவனம், முதுகலை ஆசிரியர் பூபாலன், ஆசிரியர் மகாவீர் உள்ளிட்ட மாணவ மாணவிகள் பலரும் பங்கேற்றனர்.