June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

விழுப்புரம் மாவட்டம். மேல்மலையனூர் வட்டத்திற்கு உட்பட்டபெரிய நொளம்பை , தாழங்குணம், எய்யில், செவலபுரை, கெங்கபுரம், மரக்கோணம் போன்ற இன்னும் பல ஊராட்சிகளில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த இரண்டு மாதமாக பதிவு செய்தும் நெல் கொள்முதல் செய்யாமல் உள்ளதால் விவசாயிகள் சாலை மறியல் செய்தனர்

தகவல் அறிந்த செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார் அவர்கள் சாலை மறியல் செய்த இடத்திற்கு நேரில் வந்து விவசாயிகளிடமும், அதிகாரியிடம் சுமூகமாக பேசி தேர்வு செய்தார்

பேசிய சிறிது நேரத்தில் நேரடி கொள்முதல் நிலையம் செயல்பட தொடங்கியது.