வந்தவாசி, ஜன 16:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்க ருக்குமாயி தாயார் கோவிலில் நேற்று தைத்திருநாளை முன்னிட்டு மூல மூர்த்திகளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. பிறகு பட்டாடை உடுத்தி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பாகவத கோஷ்டிகள் பங்கேற்ற நாம சங்கீர்த்தன பஜனை நடைபெற்றது. இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
வந்தவாசி ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் மற்றும் ஜலகண்டேஸ்வரர் கோவிலில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் நல்லூர் ஸ்ரீ சுந்தரவரதராஜப் பெருமாள் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

More Stories
ஸ்ரீ ஆத்மநாதர் சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது
அய்யலூர் அருகே கோவில் திருவிழாவில் செருப்பு மற்றும் துடைப்பத்தால் ஒருவருக்கொருவர் அடித்தும், உடலில் சேறு பூசியும் வினோத நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
எரமலூர் பெருமாள் கோவிலில் வசந்தோற்சவ விழா..!