புதுச்சேரி:
புதுச்சேரி அரும்பார்த்தபுரம் திருக்குறளார் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, இன்று (04-02-2026) காலை 9.30 மணி அளவில் ஸ்ரீ மஹாகணபதி ஹோமம் மற்றும் மஹா லக்ஷ்மி ஹோமம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (உழவர்கரை) M.U. லாவண்யா அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
ஆலயத் திருப்பணி மற்றும் அறங்காவலர் குழுவைச் சேர்ந்த பின்வரும் நிர்வாகிகள் இன்று நடைபெற்ற வழிபாடுகளில் பங்கேற்றனர், என் நிகழ்ச்சியில்
திருப்பணிக்குழு,தலைவர் R.K.S. நடராஜன், செயலாளர் J.K. பாலு, பொருளாளர் N. ரவி.
அறங்காவலர்குழு: தலைவர் P. அனந்தராமன், செயலாளர் L. பழனிராஜ், பொருளாளர் M. மனோகரன், மற்றும்
குழு உறுப்பினர்கள், P. சீனுவாசன், S. முனுசாமி, M. நாராயணன், D. வைத்தியநாதன், B. குருபாண்டியன், V. தண்டபாணி, P. சுகுமார், S. ரவி, A.S. பழனி, P. ஜானகிராமன், R. முருகானந்தம், K. பூமிநாதன், V. சந்திரசேகர், S. கௌதமம், A. கிருஷ்ணராஜ், P. சிவனேசன், N. நடராஜன், M. விஜயகுமார் மற்றும் V. அன்பழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய நிகழ்வான ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வரும் பிப்ரவரி 6, 2026 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 9.00 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் நடைபெற உள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகளைத் திருப்பணிக்குழுவினரும் ஊர் பொதுமக்களும் செய்து வருகின்றனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்