திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிப்பு – 100% வாக்களிப்போம் என உறுதிமொழி ஏற்பு ….
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்ச்சி மாதம்தோறும் 20-ஆம் தேதி நடைபெற்று வருகிறது.இந்நிகழ்விற்கு புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமையில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்வினை தொடங்கி வைத்து திருவள்ளுவர் சிலைக்கு முன்பாக இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம் என உறுதிமொழி ஏற்றனர். உடன் புதுவைத் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் ப.திருநாவுக்கரசு, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பொறிஞர் மு.சுரேஷ்குமார், அ.சிவேந்திரன், கவிஞர் இர.ஆனந்தராசன்,முனைவர் அருள்ராஜ், அய்யன்காளி மனோகர், செந்தில்,சம்பத் நீசு,நூலகர் ராஜேந்திரன், ஜெயபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!