திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் P. அம்மையப்பன் அவர்கள் தொழிற்கல்வி ஆசிரியராக 40 ஆண்டு 8 மாத காலம் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து பணி நிறைவு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளியில் பணியாற்றிய மூத்த ஆசிரியர்கள் ,முன்னாள் தலைமை ஆசிரியர்கள், பிற பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் ,பள்ளி ஆசிரியர்கள் ,பிறப்பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் அவரின் உறவினர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். மேலும் இவ்விழாவின் P. அம்மையப்பன் பணி நிறைவு பாராட்டு விழாவினை தொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியர் S.அபுதாகிர், உதவி தலைமை ஆசிரியர் S.ஆனந்தராஜ் , செயலாளர் முருகானந்தம் மற்றும் இருபால் ஆசிரியர் பெருமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
பணி நிறைவு பாராட்டு விழா :

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்